Home » » உலகில் தனிமைப்படுத்தும் அளவிற்கு பரவிய கொடுமையான நோய்கள்

உலகில் தனிமைப்படுத்தும் அளவிற்கு பரவிய கொடுமையான நோய்கள்

Written By DTH News on 08 April 2020 | 4:23 PM

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழவதும் பரவியுள்ளது.இதனால் உலக நாடுகள் எல்லாம் பெரும்பாலும் ஊரடங்கை அறிவித்துள்ளன. மக்கள் எல்லாம் வீட்டிற்குள்ளேயே தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இதேபோல உலகில் இதற்கு முன்பு பரவியது. இது குறித்த முழு தகவலை கீழே காணுங்கள்.

பூபோனிக் பிளேக் - வெனீஸ்
14ம் நூற்றாண்டில் ஐரோப்ப நாடுகளில் இந்த நோய் வரவியது. முக்கியமாக கடல் பகுதிகளில் அதிகம் பரவியது. இதனால் அந்த நாட்டிற்கு வரும் கப்பல்கள் 40 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னரே கப்பலில் வந்த பயணிகள் மற்றும் சரக்குகளை இறக்கும் நடை முறை இருந்தது. இந்த நோயால் ஐரோப்பாவில் அப்பொழுது 2 கோடி பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.

மஞ்சள் காமாலை
பிலாடெல்பியா என்ற நாட்டில் 18ம் நூற்றாண்டில் மஞ்சள் காமாலை பரவியது. அந்நாட்டு அரசு பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் ஊருக்கு வெளியே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தியது. இருந்தாலும் கொசுக்கள் மூலம் அதன் பரவல் அதிகமாக தான் இருந்தது. இதனால் பலர் அந்த நாட்டை விட்டே வெளியேறினர். இது கிட்டத்தட்ட 100 பேரை பலி வாங்கும்நோயாக மாறியது. 1793ம் ஆண்டுகளில் இந்த நோய்க்காக சுமார் 5 ஆயிரம் பேர் பலியாகியிருந்தனர். இது அந்நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் ஆகும்.

டைப்ரஸ் - நியூயார்க்
1892ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள ஜூ இனி மக்கள் எல்லீஸ் என்ற தீவிற்கு குடிபெயர்ந்துவந்தனர். அவர்களை ஆய்வு செய்த அதிகாரி அவர்கள் உடலில் அதிகமாக பேன் இருந்ததை கண்டுள்ளார். அந்த பேன் டைப்பஸ் என்ற நோயை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் பரவுவது தெரியும் போது கிட்டத்தட்ட பெரும்பாலன மக்கள் நியூயார்க்கில் குடியேறி விட்டனர். அவர்களில் 70 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். ஏற்கனவே அந்த சமயம் காலார பரவியதால் அரசு முன்னெச்சரிக்கையாக இதில் செயல்ப்பட்டதால் பெரிய அளவில் பரவல் இல்லை.

பூபோனிக் பிளேக் சான் பிரான்ஸிஸ்கோ
சீனாவிலிருந்து சான்பிரான்சிஸ்கோ பகுதியில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் இறந்த போது தான் அப்பகுதியில் இந்த நோய் பரவியது.இதை கண்டுபிடித்த அரசு அந்த இடத்தை மொத்தமாக தனிமைப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பலர் வேலைகளை இழந்தனர். சில நாட்களில் இந்த தனிமைப்படுத்துதல் அகற்றப்பட்டது. அதற்கு முன்னர் நோய் பரவில் நின்றது உறுதி செய்யப்பட்டது.

டைபாய்டு - நியூயார்க்
1907ம் ஆண்டு பிறவியிலேயே டைபாய்டு பாதித்த பெண் ஒருவர் வீட்டு வேலைகள் செய்து அங்கிருந்தவர்களுக்கு எல்லாம் டைபாய்டு நோயை பரப்பினார். இறுதியாக அவரை கண்டுபிடித்து அவரை அரசாங்கம் 30 ஆண்டுகள் தனிமைப்படுத்தியது. இது குறித்த விரிவான செய்திகளை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

covid-19

வீனரல் நேய்
முதலாம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவ வீரரள்கள் பலருக்கும் நோய் ஒன்று பரவியது அதே வகையான நோய் அப்பகுதியில் சுற்றி திரியும் விபச்சார தொழில் செய்யம் பெண்களுக்கும் இருந்தது.இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவரையும் அந்நாட்டு அரசு தனிமைப்படுத்தி கண்காணித்தது. உடலுறவு மூலமாக பரவும் இந்த வியாதி சுமார் 30 ஆயிரம் பெண்களுக்கு இருந்தது. பாசிட்டிவ் இருந்த பெண்கள் எல்லாம் சிறைப்படுத்தப்பட்டனர். மேலும் ராணுவ வீரர்களுக்கு காண்டம் இலவசமாக வழங்கப்பட்டது.

ஃப்ளு - ஐரோப்பா, அமெரிக்கா
1917-1919ம் ஆண்டிற்கிடையில் ஒரு விதமான நோய் ஒன்று ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவியது. இந்த நோய்க்கு 5 கோடிபேர் பலியானதாக கூறப்படுகிறது. இதனால் அந்த காலங்களில் தற்போது உள்ளது போல ஊரடங்கு பிறப்பிக்கப்ட்டு கட்டுப்படுத்தப்பட்டது.

சார்ஸ் - கனடா
சார்ஸ் நோய் சீனாவிலிருந்து பரவ துவங்கியிருந்தாலும், கனடாவில் பெரும் பாதிப்பைஏற்படுத்தியது. கனடாவில் சுமார் 30 ஆயிரம் பேரை இந்த நோய் தாக்கியது. ஆனால் அது உருவான பீஜிங்கில் 2500 பேரை தான் தாக்கியது.இந்த நோய் தாக்கியவர்கள் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்டனர்.


பூபோனிக் பிளேக் - சீனா
சீனாவில் கடந்த 2014ம் ஆண்டு பூபோனிக் பிளேக் நோய் பரவியது. இதைகண்டு பிடித்த சீன அரசு அப்பகுதியை முயற்றிலும் தனிமைப்படுத்தியது. சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். பல நகரங்கள் சீல் வைக்கப்பட்டன. அந்த நடவடிக்கையால் இந்த நோய் அதிகம் பரவவில்லை.

எபோலா -லிபேரியா, சிரியா
லிபேரியா நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு எபோலா நோய் தாக்கம் ஏற்பட்டது. இந்த நோய் பரவாமல் தடுக்க 21 நாட்கள் அந்நாட்டில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஆனால் 10 வது நாளே மக்கள் போராட்டத்தில் குவிந்ததால் ஊரடங்கை நடத்த முடியவில்லை. இதனால் சுகாதார துறையின் வீடு விடாக சென்று பாதிக்கப்பட்வர்ளை ஆய்வு செய்து அவர்களுகு்குபல விஷஙய்களை கற்றுக்கொடுத்தனர். ஊரடங்கை மக்கள் மதிக்காததால் எபோலா அதிகமாக பரவியது.

Share this article :

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st